குரு பெயர்ச்சி (2018 - 2019) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி)

வழக்கு


குருவின் பலத்தால் உங்களுக்கு வழக்குகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். நீங்கள் தற்போது குழந்தை காவல், விவாகரத்து மற்றும் சொத்து சம்பந்தமாக வழக்குகளில் இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நீங்கள் எண்ணிய பலனை பெறுவீர்கள். எனினும் தற்போது ஏழரை சனி காலம் நடப்பதால் நீங்கள் சற்று உங்கள் எதிர் கட்சியினரிடம் உங்களுக்கான நஷ்ட்டஈடு கிடைப்பதில் சற்று விட்டுக்கொடுத்து போக வேண்டும்.
தற்போது புதிதாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல் இருப்பது நல்லது. ஏழரை சனி உங்கள் வழக்கை தாமதப் படுத்தலாம். இது உங்களுக்கு பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக் கூடும். சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் உங்கள் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். பெருமாளை வணங்குவதால் உங்களுக்கு நிதி நிலையில் நிவாரணம் கிடைக்கும்.


காப்பீடு: இது குறிப்பாக அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு. போதுமான அளவு வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் உங்கள் சொத்துக்கான காப்பீடு உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சொந்த வீட்டில் வசிப்பவராக இருந்தால் அம்ப்ரேல காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.


Prev Topic

Next Topic