குரு பெயர்ச்சி (2018 - 2019) (முதல் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

அக்டோபர் 11, 2018 முதல் மார்ச் 27, 2019 வரை கடுமையான சோதனை காலம் (30 / 100)


ஏழரை சனி காலத்தின் இறுதி பாகத்தில் நீங்கள் தற்போது இருக்கின்றீர்கள். குரு பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் கடந்த ஒரு வருடமாக இருந்து உங்களுக்கு முக்கியமாக சுப காரியங்கள் நிகழ்த்த உறுதுணையாக இருந்திருப்பார். குரு பகவான் தற்போது உங்கள் ராசியின் 1ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது ஜென்ம குருவை குறிக்கும்.
சிறிய வேலைகள் கூட உங்களை விரைவாக சோர்வடைய வைக்கும். உங்கள் சக்திகள் விரைவாக குறையும். உங்கள் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் உங்களுக்கு நோய் விரைவாக தோற்றும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் உங்கள் உடம்பில் உள்ள கொழுப்பு சத்து, சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றை அவ்வப் போது பார்த்து கொள்வது நல்லது. உங்கள் மனைவி / கணவன் மற்றும் குடும்பத்தினர்களின் உடல் நலம் பாதிக்க படக் கூடும். போதுமான அளவு மருத்துவ காப்பீடு உள்ளதா என்பதை பார்த்து கொள்வது நல்லது.



உங்கள் குடும்ப பிரச்சனைகள் அதிகரிக்க கூடும். நீங்கள் உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமண வரன் பார்க்கின்றீர்கள் என்றால் அது நீங்கள் எண்ணிய படி நடப்பது சந்தேகமே. மேலும் உங்கள் குழந்தைகள் நீங்கள் எதிர் பாராத வண்ணம் உங்களுக்கு கெட்ட செய்திகளை கொண்டு வரலாம். புது உறவுகள் அமைத்து கொள்ள அல்லது திருமணம் செய்ய இது ஏற்ற நேரம் அல்ல. உங்கள் மனைவி / கணவன் மற்றும் அவருடைய வீட்டார்களுடன் சில கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால் அது உங்களுக்கு சாதகமற்ற நிலையில் நகரக் கூடும்.
உங்கள் அலுவலக சுமைகள் அதிகரிக்க கூடும். அலுவலகத்தில் ஏற்படும் அரசியல் மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க கூடும். உங்கள் பிறந்த ஜாதகம் பலவீனமாக இருந்தால் நீங்கள் வேலையை இழக்கும் சூழலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் இந்த காலகட்டத்தில் எந்த ஒரு பதவி உயர்வும் சம்பள உயர்வும் எதிர் பார்க்காமல் இருப்பது நல்லது. அதனை தவிர்த்து உங்கள் ஜீவாதரத்திர்க்காக நீங்கள் உத்தியோகத்தை தக்க வைத்து கொள்ள முயற்ச்சிப்பது நல்லது. நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் உங்களுக்கு புது வேலை வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே. நேர்காணலில் உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப் படுவதால் நீங்கள் வெற்றி பெற முடியாமல் போகலாம். தொழிலதிபர்களுக்கு எதிர் பாராத பின்னடைவுகள் ஏற்படக் கூடும். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்காமல் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக நிதி நிலையில்!




உங்கள் நிதி பிரச்சனைகள் அதிகரிக்க கூடும். உங்கள் செலவுகள் சேமிப்பை குறைக்க கூடும். மேலும் நீங்கள் வழக்கு மற்றும் சில முக்கிய ஆவணங்கள் தொலைந்து போவது, குறிப்பாக சொத்துக்கள் ஏதேனும் விற்கும் முயற்ச்சியில், ஆகியவை உங்களுக்கு பெரிய அளவில் நிதி நட்டத்தை ஏற்படுத்த கூடும். ஊக அவர்த்தகம் மற்றும் நாள் வர்த்தகம் செய்பவர்கள் அதிகம் நட்டத்தை காண நேரிடும். உங்கள் உங்கள் சொத்துக்கள், வீடு மற்றும் பங்குகளை உங்கள் கடனை அடைக்க விற்க வேண்டிய சூழல ஏற்படலாம். எனினும் ரியல் எஸ்டேட் முதலீட்டை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Prev Topic

Next Topic