![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
கடந்த ஒரு வருடமாக குரு மற்றும் சனி பகவான் உங்கள் தொழிலை சரியாக நடத்த முடியாமல் பல தடைகளை ஏற்படுத்தி இருந்திருப்பார்கள். மேலும் உங்கள் மகா தசை பலவீஎனமாக இருந்திருந்தால் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் நிலையம் ஏற்பட்டிருந்திருக்கும். உங்களுக்கு எதிரான சதி திட்டங்கள், மறைமுக அரசியல் போன்றவை உங்கள் சக்தியை கரைத்து இருக்கும்.
குரு தற்போது உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு இடம் மாறுவது உங்களுக்கு நல்ல செய்தி. குரு உங்களை அஷ்டம சனியின் மோசமான பாதிப்புகளில் இருந்து உங்களை காப்பாற்றுவார். கடந்த நிகழ்வுகளை உங்களது அனுபவமாக எடுத்து கொண்டு நீங்கள் தற்போது உங்கள் தொழிலில் நேர்மறை முயற்ச்சிகள் எடுப்பீர்கள். அனேக புதிய சிந்தைகளுடன் புது முதலீட்டாளர்களை நீங்கள் கவருவீர்கள். அடுத்த 12 மாதங்களில் உங்களது மொத்த லாபத்தின் அளவு பான் மடங்கு அதிகரிக்கும்.
பல வழிகளில் இருந்து பண வரத்து இருக்கும். வெளிநாட்டில் இருந்தும் பணம் வரும். உங்களுக்கு தேவையான முதலீடுகளை உங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிக் கடன் மூல்வமாக பெறுவீர்கள். மேலும் உங்களுக்கு நீண்ட கால ப்ரோஜெக்ட்டுகளும் உங்களுக்கு கிடைக்கும். இதனால் தொடர்ச்சியாக நல்ல பண வரத்து ஏற்படும். எனினும் ஏப்ரல் 2019 முதல் ஜூலை 2019 வரை சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அந்த காலகட்டத்தில் அஷ்டம சனியின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கக் கூடும்.
சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் வரை எந்த ஒரு புதிய தொழிலும் தொடங்காமல் இருப்பது நல்லது. உங்கள் சாதக பலன் இல்லாமல் உங்கள் தொழிலை விரிவு படுத்தும் முயற்சி செய்யாமல் இருப்பதும் நல்லது. சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் சிறப்பாக செயல் படுவார்கள்.
Prev Topic
Next Topic