![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வழக்கு |
வழக்கு
குருவின் பலத்தால், நிலுவையில் இருக்கும் வழக்கில் இருந்து உங்களுக்கு நல்ல தீர்ப்பும், நிவாரணமும் கிடைக்கும். தற்போது குழந்தை காவல், விவாகரத்து அல்லது ஜீவனாம்சம் போன்ற வழக்கு ஏதாவது இருந்தால், அதன் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெப்ரவரி 2020 வாக்கில் உங்களுக்கு சாதகமான பலனைப் பெறுவீர்கள். வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். நீங்கள் பாதிக்கப்பட்டவராக இருந்தால், ஒரு பெரிய தொகை செட்டில்மென்ட்டாக கிடைக்கும்.
பூர்வீக சொத்துக்களை உங்கள் பெயரில் மாற்றுவதில் நீங்கள் வெற்றி அடைவீர்கள். பெப்ரவரி 2020 முதல் ஏழரை சனி காலம் தொடங்குவதால், நீங்கள் நிலுவையில் இருக்கும் வழக்குகளில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை எவ்வளவு விரைவாக வழக்கில் இருந்து வெளி வர முடியுமோ, அவ்வளவு விரைவாக வந்து விடுவது நல்லது. ஏனென்றால், ஏழரை சனியின் தாக்கம் நீண்ட காலத்திற்கு 2021 முதல் அதிகமாக இருக்கும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic