![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (நான்காம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நான்காம் பாகம் |
செப்டம்பர் 13, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை மன உளைச்சல் (20 / 100)
இந்த காலகட்டத்தில் குர் வக்கிர கதி அடைகின்றார், மேலும் சூழலை மோசமாக்க ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருகின்றார். ராகு ஜென்ம ராசியிலும், குரு அஷ்டம ராசியிலும் சஞ்சரித்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களை உங்கள் வாழ்க்கையில் உண்டாக்கக் கூடும். விடயங்கள் உங்கள் கட்டுபாடின்றி நகரக் கூடும். உங்களுக்கு எதிர்பாராத கேட்ட செய்திகள் வரும் என்பதை எதிர்பார்க்கலாம். தூக்கம் இல்லாத பல இரவுகளை நீங்கள் கடக்க நேரிடும். அதிக மனக் கவலையும், மன அழுத்தமும் உங்களுக்கு ஏற்படும். சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும், நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்து, கடவுளை வணங்கி உங்கள் வாழ்க்கையில் வருவதை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
செவ்வாய் இந்த பாகத்தில் வக்கிர கதி அடைவதால், உங்கள் மனைவி/கணவன் மற்றும் குடும்பத்தினர்களுடன் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். இதனால் உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக அவர்களை விட்டு பிரிய நேரிடலாம். காதலர்கள் வலிமிகுந்த சூழல்களை சந்திக்க நேரிடும். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வர மாட்டார்கள். தவறான வதந்திகள் உங்கள் நற்பெயரை பாதிக்கக் கூடும். கிரிமினல் வழக்குகளில் இருந்து வெளி வருவது கடினமாகப் போகலாம். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், உறவினர்கள் முன் நீங்கள் அவமானப் படும் சூழல் உண்டாகலாம்.
அலுவலகத்தில் ஏறபடும் அரசியலால் நீங்கள் தூக்கம் இல்லாத இரவுகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். மேலும் உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால், நீங்கள் வேலையை இழக்கும் சூழலும் உண்டாகலாம். இல்லையென்றால் நீங்கள் உங்கள் வேலையை அலுவலக்கத்தில் ஏற்படும் உங்களுக்கு எதிரான அரசியல் அல்லது அவமானப்படக் கூடிய சூழல்களால் ராஜினாமா செய்து விடக் கூடும். இந்த காலகட்டத்தில் எந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் எதிர் பார்க்க முடியாது. நீங்கள் உங்கள் வாழ்வாதாரதிற்க்காக உங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும், தொழிலதிபர்கள் அதிக நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.. உங்கள் வங்கி கணக்கு உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால் திவாலாகும் சூழலும் உண்டாகலாம்.
உங்கள் நிதி நிலை இந்த பாகத்தில் மோசமாக இருக்கும். நீங்கள் உங்கள் உறவினர்களிடம் இருந்து இந்த காலகட்டத்தில் கடன் வாங்கி இருந்தால், அவமானப் படும் சூழல் உண்டாகலாம். மேலும் உங்களுக்கு அதிகரிக்கும் கடன்களால் நீங்கள் பீதி அடையும் நிலையம் உண்டாகலாம். நீங்கள் வர்த்தகத்தில் முதலீடு செய்திருந்தால், அதில் ஏற்படும் நிதி இழப்பை, உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்தே இருக்க மாட்டீர்கள் என்ற சூழல் உண்டாகலாம். மேலும் இந்த இழப்பால், உங்கள் சொத்துக்களையும் நீங்கள் இழக்க நேரிடும். எனினும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நவம்பர் 2௦2௦ல் குரு பெயர்ச்சி நடப்பதால், இந்த பிரச்சனைகளில் இருந்து வெளி வந்து நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic