![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | வழக்கு |
வழக்கு
ஆகஸ்ட் / செப்டம்பர் 2019 வரை உங்களுக்கு நிலுவையில் இருந்த வழக்குகள் குறித்த விடயங்கள் சிறப்பாக நடந்திருக்கும். ஆனால் இப்போது அது நடப்பதில் சந்தேகம் தான். அதிக சட்ட பிரச்சனைகள் உண்டாகலாம். உங்கள் மீதான தவறான குற்றங்கள் உங்கள் நற்பெயரை பாதித்து, பண இழப்பையும் உண்டாகலாம். தற்போது ஏதாவது வழக்குகள் நடந்து கொண்டிருந்தாள், நீங்கள் அதில் தோற்றுப் போகும் வாய்ப்பும் உள்ளது. இதனால் உங்களுக்கு அதிக நிதி இழப்புகள் ஏற்பட்டு, உங்கள் செல்வாக்கும் பாதிக்கப்படலாம். கிரிமினல் வழக்குகளில் இருந்து வெளி வர முடியாமல் போகலாம். நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தை பார்த்து, ஒரு நல்ல தீர்வை பெற முயற்சி செய்ய வேண்டும்.
உங்கள் மனைவி/கணவன், உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்களுடன் எந்த வழக்கிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இதனால் பிரச்சனைகள் அதிகமாகக் கூடும். குழந்தை காவல், ஜீவனாம்சம் போன்ற வழக்குகளில் நீங்கள் மன ரீதியாக அதிகம் பாதிக்கப்படலாம். சுதர்சன மகா மந்திரம் அல்லது கந்தர் சஷ்டி கவசம் கேட்பதால் உங்கள் பிரச்சனைகளின் தாக்கம் குறையும். உங்கள் சொத்துக்களை பாதுகாக்க அம்ப்ரளா காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.
Prev Topic
Next Topic