குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் (65 / 100)


இந்த காலகட்டத்தில் கிரகங்கள் உங்கள் பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிப்பார்கள். இதனால் உங்களுக்கு ஒரு சிறப்பான முன்னேற்றம் ஏற்படும், உங்கள் சக்திகளை நீங்கள் மீண்டும் பெறுவீர்கள். யோகா, மூச்சி பயிற்சி மற்றும் புண்ணிய தளங்களுக்கு செல்வது போன்ற காரியங்கள் உங்கள் நேர்மறை சக்திகளை அதிகரிக்கும். கடன சமீப காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட மோசமான சம்பவங்களை ஜீரநிப்பீர்கள். அனைத்து பிரச்சனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வீர்கள்,.
உங்கள் உடல் உபாதைகள் குறையும். உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவில் முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் விரும்புவரை விட்டு பிரிந்திருந்தால், தற்காலிகமாக நிவாரணம் கிடைக்கும். எனினும் மீண்டும் இணைவதற்கு முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலனை பார்த்துக் கொள்வது நல்லது. ஏனென்றால், இந்த நிவாரணம் தற்காலிகமானது. உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம். எனினும், இந்த பாகத்தின் காலகட்டத்திற்குல்லேயே திருமணம் முடிந்து விடுவதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லை என்றால், செய்த நிச்சயம் ரத்தாகி, இதனால் உங்கள் குடும்பத்திற்கு அடுத்த பாகத்தில் அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உள்ளது.


உங்களுக்கு தற்போது வேலை இல்லாமல் இருந்தால், உங்களுக்கு குறைந்த சம்பளமாக இருந்தாலும், ஒரு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலை சுமை மற்றும் அரசியல் அலுவலகத்தில் குறையும். தொழிலதிபர்களுக்கு சிறு ப்ரோஜெக்ட்டுகள் கிடைக்கும். இதனால் பண வரத்து அதிகரிக்கும். நீங்கள் உங்களது கடனையும், மாதாந்தர தொகையையும் கட்டுவீர்கள். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஓரளவிர்க்காயினும் ஏற்படும். எனினும் பங்கு சந்தை நிலவரம் உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் மட்டுமே லாபம் தரும். உங்கள் தாய் நாட்டிற்கு விசா ஸ்டம்பிங் செய்ய பயணம் செய்ய இது ஏற்ற நேரம். எனினும், எந்த ரிஸ்க்கும் எடுக்கும் முன் உங்கள் பிறந்த சாதகத்தின் பலம் உள்ளதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.



Prev Topic

Next Topic