குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை மிதமான பின்னடைவுகள் (55 / 100)


இந்த குரு பெயர்ச்சியின் சிறப்பான பாகமாக இந்த இரண்டாம் பாகம் இருக்கும். குரு மார்ச் 29, 2020 அன்று மகர ராசிக்கு அதி சரமாய் பெயருகிறார். நீங்கள் உடல் உபாதைகளில் இருந்து முற்றிலுமாக வெளி வருவீர்கள். உங்கள் தன்னம்பிக்கையின் அளவு அதிகரிக்கும். காதல் விடயங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், திருமண முயற்சிகள் செய்ய இது ஏற்ற நேரம். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம். எனினும், குழந்தை பேரு பெற, உங்கள் பிறந்த சாதக பலனை பார்க்க வேண்டும்.
உங்கள் வேலை சுமை மற்றும் பதற்றம் குறையும். உங்கள் புது மேலாளர் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது விரைவான வளர்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்ய, பதவி உயர்வு பெற மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றை பற்றி பேச இது ஏற்ற நேரம். இந்த பாகத்தில் உங்கள் விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்கள் ஒப்புதல் பெரும். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவிற்கு ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள். உங்களுக்கு நல்ல ப்ரோஜெக்ட்டுகள் கிடைத்து அதனால் உங்கள் பண வரத்து அதிகரிக்கும். உங்கள் தொழிலை விரிவு படுத்த இது ஏற்ற நேரம். தொழில் குறித்த பயணம் உங்களுக்கு நல்ல வெற்றியைத் தரும்.


அதிகரிக்கும் பண வரத்து உங்கள் கடனை குறைக்க உதவும். உங்கள் வங்கிக் கடன் குறைந்த வட்டி விகிதத்திலும், எந்த சிக்கல்களும் இல்லாமலும் ஒப்புதல் பெரும். பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு இந்த பாகத்தில் நல்ல லாபத்தைத் தரும். புது வாகனம் மற்றும் வீடு வாங்க இது ஏற்ற நேரம். புது வீட்டிற்கு குடி பெயர இது ஏற்ற நேரம். எனினும் வரும் பாகங்கள் சிறப்பாக இல்லாததால், உங்களுக்கு பிறந்த சாதகத்தின் பலன் தேவை.



Prev Topic

Next Topic