![]() | 2019 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | மூன்றாம் பாகம் |
ஆகஸ்ட் 11, 2019 முதல் to நவம்பர் 04, 2019 வரை கெட்ட நேரம் (20 / 100)
இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை கொடுக்கும். பல விசயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கக் கூடும். உங்களுக்கு எதிர் பாராத கெட்ட செய்திகள் வரக் கூடும். தூக்கம் இல்லாத பல இரவுகளை நீங்கள் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். மன வருத்தம் மற்றும் மன அழுத்தம் அதிகமாக இருக்கக் கூடும். சுதர்சன மகா மந்திரம் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டும் கடவுளை வழிபட்டு வாழ்க்கையில் நடப்பதை பொறுமையோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் மனைவி/கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். நீங்கள் கவனமாக இல்லை என்றால் தற்காலிகமாக பிரியக் கூடும். காதலர்கள் அதிக வலி மிகுந்த சூழலை எதிர் கொள்ள நேரிடலாம். நீங்கள் அதிக உடைமையோடு இருந்தால் அது பல மன சம்பந்தமான பிரச்சனைகளையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக் கூடும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். நீங்கள் உங்கள் மீது தவறு இல்லை என்றாலும் உறவினர்கள் முன்பு அவமானப் படும் சூழல் ஏற்படலாம். பொய்யான குற்றச்சாட்டு உங்கள் பெயரை அதிகம் பாதிக்கக் கூடும். கிரிமினல் வழக்குகளில் நீங்கள் சம்பத்தப் படும் சூழலும் ஏற்படலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் ஏற்படும் அரசியலை சமாளிப்பதில் அதிக சவால்களை சந்திக்க நேரிடும். நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டால் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இல்லை எட்ன்றால் நீங்கள் அதிக அரசியல் மற்றும் அவமானப் படும் சூழல் உங்கள் அலுவலகத்தில் இருப்பதால் உங்கள் வேலையை ராஜினாமா செய்ய நேரிடலாம். இந்த காலகட்டத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு போன்றவற்றை எதிர் பார்க்க முடியாது. உங்கள் வாழ்வாதாரத்திற்காக உங்கள் வேலையை காப்பாற்றிக் கொள்ள முயற்ச்சிக்க வேண்டும். தொழிலதிபர்கள் அதிக நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் சாதக பலன் பலவீனமாக இருந்தால் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் நிலையம் ஏற்படலாம்.
உங்கள் நிதி நிலை பொறுத்த வரையில் இது ஒரு சவால் மிகுந்த காலகட்டமாக இருக்கும். உங்கள் அன்றாட தேவைகளுக்கு கிரெடிட் கார்டை அதிகம் பயன் படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களது தினசரி தேவைகளுக்காக நீங்கள் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். உங்கள் உறவினர்களிடம் இருந்து கடன் வாங்கினால் நீங்கள் அவமானப் படும் நிலை ஏற்படலாம். பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதில் ஏற்படும் நட்டத்தில் இருந்து உங்கள் வாழ்நாள் முழுவதும் வெளி வர முடியாமல் போகலாம். உங்கள் சொத்துக்கள் அனைத்தையும் இழக்கும் நிலையம் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic