2019 புத்தாண்டு (இரண்டாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Meena Rasi (மீன ராசி)

மார்ச் 27, 2019 முதல் ஏப்ரல் 25, 2019 கலவையான பலன்கள் (55 / 100)


குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவதால் தன்னுடைய பலத்தை குறைத்துக் கொள்வர். எனினும் சனி பகவான் ஏப்ரல் 25, 2019ல் வக்கிர நிவர்த்தி அடைவதால் உறுதுணையாக இருப்பார். ராகு மற்றும் கேதுவிடம் இருந்து பெரிதாக எந்த பலனையும் எதிர் பார்க்க முடியாது. மொத்தத்தில் இந்த காலகட்டம் உங்களுக்கு கலவையான பலன்களைத் தரும். நீங்கள் ஏப்ரல் 25, 2019 வரை பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லாமல் சற்று அழுத்தத்துடன் காணப் படுவீர்கள். அதன் பின் பலம் பெறுவீர்கள்.
முன்பே தொடங்கிய வேலையை செய்ய நேரம் சிறப்பாக உள்ளது. எனினும் புதிதாக எந்த வேலையையும் இந்த பாகத்தில் தொடங்க வேண்டாம். நீங்கள் உங்கள் உணவில் கவனம் வைக்க வேண்டும். உடற் பயிற்சி செய்து நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க முயற்சி செய்ய வேண்டும் . உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் வரக் கூடும். நீங்கள் உங்கள் குழந்தைகள், உடன் பிறந்தவர்கள், பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கை துணைவர் வீட்டாருடன் சுமூகமான உறவு நிலையை பெற அவர்களுடன் அதிக நேரம் செலவு செய்ய வேண்டும். காதலர்கள் பெரிதாக சிறப்பான நேரத்தை இந்த காலகட்டத்தில் காண மாட்டார்கள். இந்த பாகத்தில் திருமண முயற்சி எடுப்பதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் வெளி நாட்டிற்கு பயணம் செய்யப் போகுரீர்கள் என்றால் அங்கே நிரந்தரமாக குடிபெயருவதில் சற்று கடினமான சூழல் ஏற்படலாம்.


அலுவலகத்தில் தேவையற்ற மாற்றங்கள் ஏற்படக் கூடும். நீங்கள் கடினமாக உழைத்து உங்களுக்கு கொடுக்கப் பட்ட பணியை முடிக்க வேண்டும். நீங்கள் வேலை பார்க்கும் புது ப்ரோஜெக்ட்டில் அதிகம் கற்றுக் கொள்ள உங்களுக்கு உள்ளது. உங்கள் முதலாளி மற்றும் மேலாளர் உங்களுடைய உழைப்பை மற்றும் உற்பத்தியை கண்டு மகிழ்ச்சி அடைவார். இந்த நேரத்தில் உங்கள் உத்தியோகத்தில் மாற்றத்தை எதிர் பார்ப்பது நல்லது அல்ல. தொழிலதிபர்கள் இந்த பாகத்தில் அதிக முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதற்க்கு பதிலாக நிர்வாக செலவுகளை குறைக்க முயற்சி செய்யலாம். புது யோசனைகளையும் செயல் படுத்த முயற்சி எடுக்கலாம்.
பயணம், ஆடம்பர பொருட்கள் வாங்குவது போன்ற விசயங்களில் அதிகம் செலவு செய்வீர்கள். உங்களது கிரெடி கார்டு நிலுவைத் தொகை அதிகரிக்கக் கூடும். நீங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதால் அதிகம் செலவு செய்ய நேரிடும். நீண்ட கால முதலீடு செய்பவர்கள் பங்கு சந்தையில் சில பின்னடைவுகளை காண நேரிடலாம். ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து எந்த செயலையும் செய்வது நல்லது. விசயங்கள் இந்த பாகத்தில் சரியாகி விடும்.



Prev Topic

Next Topic