2019 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Kanni Rasi (கன்னி ராசி)

ஆகஸ்ட் 11, 2019 முதல் நவம்பர் 04, 2019 வரை தோல்விகளும் ஏமாற்றங்களும் (25 / 100)


எதிர்பாரா விதமாக, இது உங்களுக்கு இந்த வருடத்தில் மற்றுமொரு சோதனை காலமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் சந்திக்க நேரிடலாம். உங்கள் உடல் மற்றும் மனம் பெரிய அளவில் பாதிக்கக் கூடும். நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை கடக்க நேரிடலாம். உங்கள் மனதில் அதிக கவலைகள் மற்றும் மன அழுத்தம் அதிகமாகவும் இருக்கக் கூடும். சுதர்சன மகா மந்திரம் கேட்பது சற்று ஆறுதலாக இருக்கும். நீங்கள் கடவுள் வழிபாடு செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
உங்கள் மனைவியோடு வாக்குவாதங்களும் சண்டைகளும் ஏறபடக் கூடும். நீங்கள் கவனமாக இல்லை என்றால் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பிரியக் கூடும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். ஏதேனும் வழக்குகள், குறிப்பாக குழந்தை காவல், விவாகரத்து மற்றும் சொத்து சம்பந்தமான சட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைப்பது சந்தேகமே. இது உங்கள் மன வருத்தத்தை அதிகரிக்கக் கூடும். இந்த காலகட்டத்தில் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்பப்து நல்லது. மேலும் உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும் நீங்கள் உறவினர்கள் முன்பு அவமானப் படும் சூழல் ஏற்படலாம்.


உங்கள் உத்தியோகம் பெரிதும் பாதிக்கப் படலாம். செப்டம்பர் 2019 வாக்கில் நீங்கள் உங்கள் வேலையை இழக்கும் சூழல் ஏற்படலாம். அலுவலகத்தில் அதிகரிக்கும் வேலை சுமை மற்றும் அரசியல் உங்கள் நேரத்தை மேலும் வீணாக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு எதிராக சதி செய்து உங்கள் வளர்ச்சியை தடுக்கக் ஓடும். நீங்கள் அவமானப் படும் சூழல் தொடர்ந்து ஏற்படுவதால் நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்ய நேரிடலாம். தொல்லிலதிபர்கள் பல சவால்களை சந்திக்க நேரிடலாம். மேலும் பெரிய அளவில் நிதி நட்டத்தை நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்கள மகா தசை பலவீனமாக இருந்தால் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் சூழல் ஏற்படலாம்.
உங்கள் நிதி நிலை பொறுத்த வரை இது ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும். நீங்கள் உங்களது கிரெடிட் கார்டை சார்ந்தே உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் உங்களது தினசரி தேவைகளுக்கு கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். பங்கு சந்தை முதலீடுகளில் இருந்து முற்றிலுமாக விலகி இருக்குங்கள். அது உங்களுக்கு பெரிய நட்டத்தை ஏற்படுத்தக் கூடும்.



Prev Topic

Next Topic