![]() | 2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Dhanushu Rasi (தனுசு ராசி) |
தனுசு ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் நவம்பர் to Nov 20, 2020 வரை மீண்டும் ஒரு பேரிழப்பு (30 / 100)
குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதால் நீங்கள் கசப்பான அனுபவங்களை பெற நேரிடும். உங்களுக்கு கடந்த பாகத்தில் கிடைத்த சிறிய நிவாரணம் தற்போது முடிந்து விடும். குரு பகவான் செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைவதால், விடயங்கள் இந்த பாகத்தில் நாட்கள் நகர நகர உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கக் கூடும்.
ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் நண்பர்கள் மூலம் சில உதவிகளை செய்வார். நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை சந்திக்க நேரிடும். உங்களுக்கு மன வருத்தமும், மன அழுத்தமும் ஏற்படக் கூடும். குடும்பத்தில் அதிக பிரச்சனைகள் ஏற்படக் கூடும். மேலும் உங்கள் பிறந்த சாதக பலன் பலவீனமாக இருந்தால், நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ உங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிய நேரிடலாம். காதலர்கள் வலிமிகுந்த சம்பவங்கள் பலவற்றை கடக்க நேரிடும். மேலும் உங்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தால், அது ரத்தாகக் கூடும். உங்களுக்கு மன அழுத்தம், பதற்றம் மற்றும் தேவையற்ற பயம் உண்டாகக் கூடும். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வர மாட்டார்கள்.
செவ்வாய் இந்த பாகத்தில் வக்கிர கதி அடைவதால், உங்கள் உத்தியோக வாழ்க்கை பெரிதும் பாதிக்கக் கூடும். அலுவலகத்தில் இருக்கும் அரசியல் உங்கள் தூக்கத்தை பாதிப்பதோடு, உங்கள் மன நிம்மதியையும் எடுத்து விடக் கூடும். மேலும் உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால், நீங்கள் வேலையை இழக்கும் சூழல் உண்டாகும். இல்லையென்றால், நீங்களாகவே, உங்கள் அலுவலகத்தில் நடக்கும் அரசியலாலும், உங்களுக்கு ஏற்படும் அவமானங்களாலும் உங்கள் வேலையை ராஜினாமா செய்து விடுவீர்கள். மேலும் சம்பள உயர்வையோ அல்லது பதவி உயர்வையோ எதிர் பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. மாறாக இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்வாதாரதிற்காக உங்கள் உத்தியோகத்தை நீங்கள் காப்பாற்றிக் கொள்ளவே முயற்சி செய்ய வேண்டும். தொழிலதிபர்களுக்கு இது ஒரு சவால் நிறைந்த மாதமாக இருக்கும்.
உங்கள் நிதி நிலை நல்ல நிலையில் இருக்காது. நீங்கள் உங்கள் உறவினர்களிடம் இருந்து இந்த காலகட்டத்தில் பணம் கடன் வாங்கி இருந்தால், அவமானப் படும் சூழல் உண்டாகக் கூடும். மேலும் அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் சூழலில் இருப்பீர்கள்,. நீங்கள் பங்கு சந்தை வர்த்தகம் செய்து கொண்டிருந்தாள், அதனால் ஒரே இரவில் பணத்தை இழக்கும் சூழல் உண்டாகும். அதனால் எந்த விதமான பங்கு சந்தை முதலீடுகளும் செய்யாமல் இருப்பது நல்லது. முடிந்த வரை பணம் வாங்குவதையோ அல்லது கொடுப்பதையோ தவிர்ப்பது நல்லது.
Prev Topic
Next Topic