2020 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


அஷ்டம சனியால், கடந்த 2.5 ஆண்டுகள் நீங்கள் அதிகம் அவதிப்பட்டிருப்பீர்கள். ஜனவரி 23, 2020 முதல் நீங்கள் அஷ்டம சனி காலத்தில் இருந்து விடுபடுகின்றீர்கள். எனினும், பிற முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. குறிப்பாக குரு மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து, தொடர்ந்து உங்களுக்கு கசப்பான அனுபவங்களைத் தரக் கூடும்.
இந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிக்கும். இதனால், இந்த ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு ஒரு நல்ல தொடக்கமாக இருக்காது. பல இன்னல்கள், சொந்த வாழ்க்கையில் பிரச்சணைகள், மற்றும் ஏமாற்றங்கள் இருக்கும். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால், நீங்கள் மன ரீதியாக நீங்கள் பாதிக்கப்படுவதோடு, நற்பெயரையும் இழக்கும் சூழல் உண்டாகும். தற்போது இருக்கும் பதவியில் இருந்து பின் தள்ளப்படலாம், அல்லது உங்கள் உத்தியோகத்தை இழக்கும் சூழல் உண்டாகலாம். செலவுகள் விண்ணைத்தொடும் அளவிற்கு அதிகரிக்கும். பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். பெப்ரவரி 2020 வரை விடயங்கள் உங்கள் கட்டுபாட்டை மீறி நடக்கும்.


மார்ச் 2020 முதல் அடுத்த 4 மாதங்களுக்கு சில நிவாரணம் கிடைக்கும். இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நீங்கள் முக்கிய முடிவுகளை உங்கள் வாழ்க்கையில் எடுக்கலாம். என்னென்றால் மீண்டும் ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரை நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள். பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலும், அல்லது முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும், உங்கள் சோதிடரை அணுகி, உங்கள் பிறந்த சாதகத்தை காட்டி, அவரிடம் ஆலோனை பெற்று அதன் பின், ஆலோசனைக்கு ஏற்றவாறு செயல்படுவது நல்லது. டிசம்பர் 2020க்கு மேல் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின், உங்கள் நேரம் சிறப்பாக மாறும்.



Prev Topic

Next Topic