2020 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி)

ஜூலை 01, 2020 முதல் நவம்பர் 20, 2020 வரை மன உளைச்சல் (30 / 100)


குரு பகவான் மீண்டும் அஷ்டம தனத்திற்கு பெயருவார். இதனால் உங்களுக்கு கடந்த மாதங்களில் கிடைத்து சிறு நிவார்நாம் தற்போது முடிவுக்கு வரும். குரு செப்டம்பர் 13, 2020 அன்று வக்கிர நிவர்த்தி அடைவதால், விடயங்கள் இந்த பாகத்தில் உங்கள் கட்டுப்பாட்டை மீறி நடக்கக் கூடும்.
செப்டம்பர் 2020 வாக்கில் ராகு உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருகிறார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மோசமான செய்திகள் வரக் கூடும். உங்கள் உடல் நலத்தின் மீது நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். இந்த பாகத்தின் போது உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலமும் பாதிக்கக் கூடும். தூக்கம் இல்லாத பல இரவுகளை நீங்கள் கழிக்க நேரிடலாம். மேலும் மன வருத்தமும், அழுத்தமும் அதிகரிக்கக் கூடும். சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். உங்கள் வாழ்க்கையில் நடக்கும் விடயங்களை ஏற்றுக் கொள்ள கடவுளை வணங்குவதோடு, உங்கள் மனோ பலத்தையும் அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.


செவ்வாய் வக்கிர கதி அடைவதால், உங்கள் மனைவி/கணவனுடனும், மற்ற குடும்பத்தினர்களுடனும் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். இதனால், உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால், நீங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்திரமாக அவர்களை விட்டு பிரிய நேரிடலாம். காதலர்கள், வலி மிகுந்த சம்பவங்களை கடக்க நேரிடும். மேலும் உங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருந்தால், அது நிற்கவும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு பதற்றம், மன அழுத்தம் மற்றும் தேவையற்ற பயம் உண்டாகும். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு மோசமான செய்திகளை கொண்டுவரக் கூஉம். உங்கள் மீதான தவறான குற்றச்சாட்டுகள் உங்கள் நற்பெயரை பாதித்து விடக் கூடும். கிரிமினல் வழகுகளில் இருந்து விடுபட முடியாமல் போகலாம். உங்கள் மீது தவறு இல்லையென்றாலும், உங்கள் உறவினர்கள் முன் நீங்கள் அவமானப்படும் சூழல் உண்டாகலாம்.
அலுவலகத்தில் ஏற்படும் அரசியலால் நீங்கள் தூக்கம் இல்லாத இரவுகளை கடக்க நேரிடும். மேலும் உங்கள் மன நிம்மதீயும் பாதிக்கக் கூடும். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால், நீங்கள் வேலையை விட்டு நின்று விட நேரிடலாம். இல்லையென்றால், அலுவலகத்தில் ஏற்படும் அரசியலாலும், உங்களுக்கு ஏற்படும் அவமானங்களாலும், நீங்கள் உங்கள் வேலையை விட்டு விட என்னலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த பதவி உயர்வையும், சம்பள உயர்வையும் எதிர் பார்க்க முடியாது. இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்வாதாரதிற்க்காக உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். தொழிலதிபர்கள் இந்த பாகத்தில் அதிக நிதி இழப்புகளை சந்திக்க நேரிடும். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால், உங்கள் வங்கி கணக்கு திவாலாகும் சூழலும் உண்டாகலாம்.


இந்த பாகத்தில் உங்கள் நிதி நிலை மோசமாக இருக்கும். நீங்கள் உங்கள் உறவினர்களிடம் இருந்து இந்த காலகட்டத்தில் கடன் வாங்கி இருந்தால், அதனால் நீங்கள் அவமானப் படும் சூழல் உண்டாகலாம். மலை போல அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் முதலீடு செய்திருந்தால், அது உங்களுக்கு வாழ் நாள் இழப்பை ஏற்படுத்தி, உங்கள் சொத்துக்களையும் இழக்கும் சூழலை உண்டாக்கக் கூடும்.

Prev Topic

Next Topic