![]() | 2022 புத்தாண்டு (மூன்றாம் பாகம்) ராசி பலன்கள் Rasi Palangal - Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை மிதமான பின்னடைவுகள் (45 / 100)
குரு மற்றும் சனி பகவான் இந்த பாக காலகட்டத்தில் வக்கிர கதி அடைவார்கள். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கடந்த பாகத்தை விட குறிப்பிடத்தக்க பின்னடைவுகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் குழந்தைகளின் உடல் நலமும் பாதிக்கப்படலாம். நீங்கள் போதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குரு வக்கிர கதி அடைந்ததும் நீங்கள் சுப காரியங்களை நிகழ்த்த திட்டமிடுவதை தவிர்த்து விட வேண்டும். உங்களுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்திருந்தது என்றால், உங்கள் வாழ்க்கைத்துனையுடன் உங்களுக்கு கருத்துவேறுபாடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. நீங்கள் அவரை புரிந்து கொள்ள அவருடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். காதலர்களுக்கு தங்கள் காதல் வாழ்க்கையில் கடினமான நேரம் நிலவலாம். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவது கடினமாக இருக்கலாம்.
சனி பகவான் மற்றும் கேதுவின் பலத்தால் அலுவலகத்தில் ஏற்படும் அழுத்தம் உங்களுக்கு சமாளிக்கும் வகையில் இருக்கும். ஆனால் உங்களுக்கு தேவையற்ற பயமும் பதற்றமும் ஏற்படலாம். அலுவலகத்தில் சில அரியல் நிலவலாம். ஆனால் விடயங்கள் மோசமாகிறது. உங்களால் எந்த பெரிய சிக்கலும் இல்லாமல் தற்போது இருக்கும் உத்தியோகத்திலேயே இருக்க முடியும். தொழில்முனைவோர்கள் பெரிதாக அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது. சந்தைப்படுத்தளுக்காக அதிக பணத்தை செலவிடுவதை தவிர்த்து விட்டு செலவுகளை கட்டுபடுத்த முயற்சிக்க வேண்டும்.
முடிந்த வரை பயணம் செய்வதை தவித்து விட வேண்டும். நீங்கள் எதை செய்தாலும் அதில் தேக்கம் ஏற்படலாம். நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகலாம். நீங்கள் இந்த பாகத்தில் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். பங்குசந்தையில் முதலீடு செய்ய இது ஏற்ற நேரம் இல்லை.
Prev Topic
Next Topic